Advertisment

“கடைபிடிக்கும் கட்டுப்பாடு பகைவர்களை அச்சுறுத்த வேண்டும்” துவங்கியது சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் தோழமை கட்சிகள் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரின. இதனை தொடர்ந்து இரு அமைப்புகளும் பேரணி நடத்த காவல் துறை தடைவிதித்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. இதன் பின் நவம்பர் 6 ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

Advertisment

இதனை தொடர்ந்து மதநல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் காவல் துறை தலைமை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.

Advertisment

இதன் பின் அக்.11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. கீ.வீரமணி, கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் இணைந்து கூட்டாக அறிவிப்பினை வெளியிட்டனர்.

இந்நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அக்டோபர் 11ம் தேதி தமிழகம் முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாய்ப்புள்ள இடங்களில் ஒன்றினைந்து தோழமைக் கட்சிகளின் உதவியுடன் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. ஆளும் கட்சி என்கிற முறையில் திமுக இதில் பங்கேற்கவில்லை. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் மனிதச்சங்கிலி அறப்போரில் பங்கேற்க முன் வந்துள்ளன.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச அமைப்பு என்பதை உணர்த்தக்கூடிய வகையில் மதத்தின் பெயரால் சாதியின் பெயெரால் மக்களை பிளவுபடுத்தும் போக்கை ஏற்கமாட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் மனிதச்சங்கிலி அறப்போர் நடைபெறும்.இந்த அறப்போரில் நாம் காட்டும் அமைதி நாம் கடைபிடிக்கும் கட்டுப்பாடும் நம் கொள்கை பகைவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்நிலையைல் இன்று சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் சார்பாக இன்று பல்வேறு இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெற்றது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுகவின் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர். எராளமான பெண்களும் தங்களது கைக் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இந்த மனித சங்கிலி நிகழ்வானது நடைபெற்று வருகிறது. மொத்தமாக 17 கட்சிகள், 44 இயக்கங்கள் இந்த மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்றுள்ளன.

vaiko Thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe