ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி சென்னை, கரூர், திருப்பூர், கடலூர், தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாகக் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 4.7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் தொடர் மழை காரணமாகத் திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Show comments