Advertisment

தொடர் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Continuous heavy rain Holiday notification for schools

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (25.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோன்று கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (25.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு மாவட்ட கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Chengalpattu holiday kanchipuram rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe