Skip to main content

தொடர் அட்ராசிட்டி... ஒரே ஊரில் ஒரே மாதத்தில் 5 பேருக்கு கால்கள் உடைந்தது எப்படி?

Published on 14/10/2021 | Edited on 15/10/2021

 

 Serial Atrocity ... How did 5 people break their legs in the same month in the same town?

 

தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு பதவியேற்ற பிறகு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு பழைய ரவுடிகளில் ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். தொடர்ந்து ரவுடியிசத்தில் ஈடுபட்டுவந்த பலர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருந்தியுள்ள ரவுடிகளிடம் இனிமேல் எந்த சூழ்நிலையிலும் ஆயுதம் எடுக்கக் கூடாது. நீங்கள் ஆயுதம் தூக்கும்போது உங்கள் குடும்பங்களும் தவிக்கும் என்று அறிவுரைகள் சொல்லி மீண்டும் அனுப்பி வைத்தனர்.

 

இந்தநிலையில்தான் தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாகவே அரிவாள் தூக்கிக்கொண்டு கூலிப்படையாகச் செல்லும் பலரையும் போலீசார் தனியாக அழைத்துத் திருந்தச் சொன்னார்கள். பலர் திருந்தினாலும் சிலர் திருந்தவில்லை.

 

கடந்த மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ பாலாவுக்கு திடீரென கால் உடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கடந்த வாரம் பட்டுக்கோட்டை மைனர் பங்களா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் அரிவாளைக் காட்டி போதைக்காக மாத்திரைகளைப் பெட்டியோடு அள்ளிச் சென்ற பண்ணவயல் ஹரிகரன், பட்டுக்கோட்டை ராஜஷ் ஆகியோர் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் பட்டுக்கோட்டை போலீசார் அடையாளம் கண்டு அவர்களைப் பிடிக்கும்போது பாலத்திலிருந்து தவறி விழுந்து கால், கை உடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தனை சம்பவங்கள் நடந்த பிறகும் இன்னும் சிலர் திருந்தவில்லை.

 

 Serial Atrocity ... How did 5 people break their legs in the same month in the same town?

 

நேற்று  (13.10.2021) புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை தங்கவேல் நகர்ப் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் முத்துக்குமார், சூரப்பள்ளம் சாலையில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் எலக்ட்ரிக் வேலைகள் செய்துவிட்டு கடைக்கு வந்து டீ குடித்துவிட்டுச் செல்லும்போது அந்தப் பக்கம் பைக்கில் சென்ற தங்கவேல் நகரைச் சேர்ந்த சுரேந்தர், பவிக்குமார் உள்ளிட்டோர் முத்துக்குமாரை தள்ளிவிட, முத்துக்குமார் எதிர்த்துக் கேட்டுள்ளார். போதையிலிருந்த இருவரும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் காட்சிகளை ஒருவர் செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்துள்ளார். வீடியோ எடுத்தவரையும் மிரட்டிவிட்டுச் சென்றது அந்த கும்பல்.

 

இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை ரவுடி விங்க் போலீசார் தர்மாவுக்கு தகவல் வர, போலீஸ்காரர் தர்மா டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனிடம் தகவலளித்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் கடந்த மாதம் தனி ஆளாகக் கடத்தல் காரை விரட்டிப்பிடித்த டி.எஸ்.பி ஜீப் ஓட்டுநர் பிரசாத், பாவேந்தன் உள்ளிட்ட சில போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது ரகளை செய்தவர்கள் தப்பிச் சென்றனர். அவர்கள் பதுங்கியுள்ள இடத்திற்கு போலீசார் சென்றபோது சுரேந்தர், பவக்குமார் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.  அப்போது அவர்களுக்கு கால் உடைந்துவிட்டதாகக் கூறி போலீசார் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

சுரேந்தர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் உள்ளன. இப்படி பட்டுக்கோட்டை நகரில் தொடர்ந்து ரவுடியிசத்தில் ஈடுபடுவோர் கை, கால்கள் உடைவது வழக்கமாக உள்ளதால் மற்றவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.