Skip to main content

'தொடரும் விபத்துகள்... மூன்றாவது முறையாக மக்கள் மறியல் போராட்டம்...'-கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் இருந்து காவலூர் சத்திரம் செல்லும் சாலை மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றாமல் அதன் மீது புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் இரண்டடி பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலை ஒருவழிச்சாலை என்பதால் இந்த சாலையில் தொடர்ந்து  விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு முன் தொடர் விபத்துக்கள் நடப்பதை தடுக்க சாலையை சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

 

அப்போது உள்ளாட்சித் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையில் மறியல் செய்த மக்களிடம் சமரசம் பேசி, சாலையை சீர் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர் சாலையின் பக்கவாட்டில் பள்ளமாக உள்ளதை சிமெண்ட் கொட்டி சரி செய்ய முயன்ற பொழுது வனத்துறையினர் சாலையை அனுமதிக்கப்பட்ட அளவை கடந்து அகலப்படுத்த கூடாது என தடுத்து விட்டனர்.

 

இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுத்து, சாலையை சீர் செய்யாததால் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகின. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். அடிக்கடி அவர்களும் கீழே விழுந்து அடிபட்டு வீட்டுக்கு வருகின்றனர்.

 

ஜூலை 10ஆம் தேதி மாலை காவலூர் சத்திரம் பகுதி சார்ந்த பெண்மணி ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது வாகனம் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண்மணி மற்றும் அவருடன் சென்ற குழந்தை இருவரும் கீழே விழுந்து அடிப்பட்டுள்ளது. அந்த பெண்மணிக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

இதனால் கொதிப்பான அக்கிராம மக்கள் ஆத்திரமடைந்து ஜூலை 11ஆம் தேதி காலை 8 மணிக்கு மறியல் போராட்டத்தை துவங்கினர். காலை சமையலை சாலையிலேயே சமைத்து உண்ணும் போராட்டம் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி மற்றும் வாணியம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் பாண்டியன், வாணியம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் வந்து, வனத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, விரைவில் நல்ல பதில் கிடைக்கும் எனச்சொல்லி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் தீர்வு காண்பதாகவும், போராட்டத்தை கைவிடுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

 

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது, போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

இந்த சாலையை சீர் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் 15 நாட்களில் சரி செய்துவிடுகிறோம் என வாக்குறுதி தருவதும், பொதுமக்கள் அதனை நம்பி போராட்டத்தை கைவிடுவதும் வாடிக்கையாகி உள்ளது . 'உயிர் சேதம் ஏற்பட்டால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ?' என்கிறார்கள் போரட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.