Skip to main content

தொடரும் காவல்துறை வாகன ஓட்டிகளிடையான மோதல்கள்..!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

Continuing clashes between police motorists ..!

 

திருவாரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளரிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், திருவாரூர் நகரப் பகுதியான கீழ வீதி பகுதியில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித் திரிபவர்களைத் தடுக்கும் விதமாக நகரக் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தள்ளாடியபடி வந்த நபரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். 

 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் வாகனத்தை ஒட்டிவந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரது இருசக்கர வாகனத்தை ஆய்வாளர் ரமேஷ் பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சாலையில் நின்று தகாத வார்த்தைகளால் பேசினார். இது திருவாரூர் கீழ வீதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

 

நேற்று முன்தினம் (07.06.2021) கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் முகக்கவசம் அனியாமல் வந்த அமமுக பிரமுகர் ஒருவரை போலீசார் இடைமறித்து, மாஸ்க் போடாமல் வரலாமா என கேட்க, காவல்துறையினருக்கும் அமமுக பிரமுகருக்கும் வாய்வார்த்தை வாக்குவாதமாகி, பிறகு கைகலப்பாகி அடித்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டது. 

 

அமமுக பிரமுகர் பிரபு மீது பல வழக்குகள் பதிவுசெய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து காவல்துறைக்கும் பாதைசாரிகளுக்கும் இடையே மோதல் உருவாகிவருவது பரபரப்பாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.