Skip to main content

டாஸ்மாக் ஊழியர்களிடம் தொடரும் கொள்ளை சம்பவம்…!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

Continued robbery incident against Tasmac employees!

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் சாலையில் உள்ளது ஒரு டாஸ்மாக் கடை. இங்கு நேற்று முன்தினம் இரவு எட்டு முப்பது மணி அளவில் விற்பனையை முடித்துக்கொண்டு 2 லட்சத்து 37 ஆயிரம் பணத்துடன் விற்பனையாளர் சுப்பிரமணியன் கடையை விட்டு வெளியே வந்தார். அப்போது திடீரென்று பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுப்பிரமணியன் முகத்தின் மீது மிளகாய் பொடி தூவி அவரை அரிவாளால் தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பணத்தைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றுள்ளனர்.  இதில் சுப்பிரமணியன் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து தகவலறிந்த சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணையும் நடத்தினார். சமீபகாலமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் பணத்தை குறிவைத்து ஒரு கும்பல் விற்பனையாளர்களை தாக்கி கொள்ளை அடித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஆசனூர் டாஸ்மார்க் கடையில் இதேபோன்று வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் ஊழியரை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

டாஸ்மாக் ஊழியர்களை குறிவைத்து தாக்கும் கொள்ளையர்களை காவல்துறை எப்போது பிடிக்கும். டாஸ்மாக் ஊழியர்கள் அதன்கண்காணிப்பாளர்கள் போன்றவர்கள் தாக்கப்படுவது தொடர் சம்பவங்களாக உள்ளன அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். காவல்துறை டாஸ்மாக் கொள்ளையர்களை கைது செய்ய  வேண்டும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு பாதுகாப்பு  ஏற்பாடு  செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகின்றனர் அதன் ஊழியர்கள்

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.