தொடரும் மத்திய பாஜக மோடி அரசின் ”நீட்” பயங்கரவாதம். தமிழக மாணவர்கள் இந்த ஆண்டும் அதற்கு பலியான கொடூரம். இதில் நம்மைத் தாக்கி அழிக்கும் எதிரியை என்ன சொல்ல? எதிரிக்கே துணைபோய் நமக்கு இரண்டகம் செய்த அதிமுக அரசுதான் இதில் குற்றவாளி என குற்றஞ்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
எடுத்த எடுப்பிலேயே கடந்த ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவைக் கொலை செய்துதான் தமிழகத்தில் நிலைகொண்டது நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு. இந்த ஆண்டும் அதன் கொலைக் கரம் நீளாமல் இல்லை. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெருவலூர் பகுதி மாணவி பிதீபாவை நீட் பலிகொண்டுள்ளது.
ஒரு கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா, ப்ளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அப்படியிருந்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த விரக்தி அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது. எலி மருந்துக்கு இரையானார். நீட்டின் கொடுங்கரம் பிரதீபாவோடு மட்டும் நிற்கவில்லை.
கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியைச் சேர்ந்த மாணவர் அருண்பிரசாத்தையும் பலிகொண்டிருக்கிறது. அருண்பிரசாத் கடந்த 2016-17ஆம் கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒரு பள்ளியில் படித்து ப்ளஸ் 2 வில் 1150 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்தார். அதனால் சென்னையில் ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து இந்த ஆண்டு மீண்டும் நீட் எழுதினார். நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நீட் தேர்வு விடைக் குறிப்பைப் பார்த்தபோது தான் எழுதிய விடைகளுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதைக் கண்டார். இந்த முறையும் தோல்விதான் என்ற வேதனையில், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நீட் தேர்வு, நம்மை அழிப்பதற்கென்றே மோடியால் ஏவப்பட்ட பயங்கரவாதம் என்பதை தேர்வு முடிவுகளே தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதி, 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 விழுக்காடு தேர்ச்சி. இந்திய அளவில் இது 35ஆவது இடம்; அதாவது கடைசி இடம். இந்திய அளவில் நீட் தேர்ச்சி 56 விழுக்காடு. இதில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம், 74 விழுக்காடு; அடுத்து டெல்லி 74 விழுக்காடு, அரியானா 73 விழுக்காடு.
இப்படி கல்வி அறிவில் கடைகோடியில் இருந்த மாநிலங்கள் முதலிடத்திற்கு வந்த தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது எப்படி? அதற்காகத்தானே நீட்! இது படித்து எடுத்த மதிப்பெண்களால் அல்ல; போட்டுக் கொடுத்த மதிப்பெண்களால்! மோசடி! இதைத்தான் மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது. அதனால்தான் சிபிஎஸ்இயால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வின் முதன்மைக் குறிக்கோள் கல்வித் துறையினின்றும் தமிழகத்தை அப்புறப்படுத்துவதுதான். எனவே தான் சொல்கிறோம், தொடர்கிறது மத்திய பாஜக மோடி அரசின் ”நீட்” பயங்கரவாதம் என்று. அதற்கு இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் பலியாகியிருப்பதே சான்று.
இதில் நம்மைத் தாக்கி அழிக்கும் எதிரியை என்ன சொல்ல? எதிரிக்கே துணைபோய் நமக்கு இரண்டகம் செய்த அதிமுக அரசுதான் இதில் குற்றவாளி என குற்றஞ்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடரும் ”நீட்” பயங்கரவாதம்! எதிரிக்கே துணைபோய் நமக்கு இரண்டகம் செய்த அதிமுக அரசு - தவாக குற்றச்சாட்டு!
சார்ந்த செய்திகள்
Next Story
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.
2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Next Story
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.
2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.