Continued lead; Volunteers pour milk for EVKS Elangovan's film

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisment

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரண்டு அறைகளில் 16 மேஜைகளில் நடக்கும் 15 சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தபால் வாக்குகளில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்த நிலையில் தற்பொழுது காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 23,416 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,786 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,598 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 159 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் உற்சாகக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் படத்திற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment