Advertisment

தொடரும் கனமழை - 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

கதச

Advertisment

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நவம்பர் முதல்வாரத்தில் பெய்த மழை பாதிப்புகளில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் தற்போதும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அன்றாட பணிகளை செய்ய முடியாமல் பலரும் இந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கரோனா பாதிப்பு பிரச்சனையில் இருந்து ஓரளவு மீண்டு பள்ளிக்கு சென்று வரும் நிலையில், இந்த மழை காரணமாக அடிக்கடி விடுமுறை விடப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe