Skip to main content

நடுக்கடலில் தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல்; பீதியில் தமிழக மீனவர்கள்...!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021
Continued attacks on fishermen in the Mediterranean Tamil Nadu fishermen in panic

 

நடுக்கடலில் கொடூர ஆயுதங்களை கொண்டு மீனவர்களை மிரட்டுவதும், தாக்குவதும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. நாகை மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்திமுனைகொண்டு சரமாரி தாக்குதல் நடத்தியதோடு, தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி இழுத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

 

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். கடந்த 21ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கே 15 நாட்டிகள் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு திசைகளில் இருந்து அதிவேக இரண்டு படகுகள் வந்தன, அந்த படகில் வந்த 15 இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நாகை மீனவர்களின் மீது சரமாரியாக தாக்கினர். அதோடு மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி படகுகளில் நாகை மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிக்க முயன்றுள்ளனர்.

 

Continued attacks on fishermen in the Mediterranean Tamil Nadu fishermen in panic

 

அதனை நாகை மீனவர்கள் தடுக்க பெரும்முயற்சி செய்துள்ளனர், ஆனாலும் கூர்மையான தூண்டில் கம்பிகளை உடலை மாட்டி சித்தரவதை செய்து தண்ணீரில் தள்ளிவிட்டுவிட்டு கொள்ளை சம்பவத்தை அறங்கேற்றியுள்ளனர். படகில் இருந்து வலை, வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி மற்றும் 3 லட்சம் மதிப்பிலான மீன்கள் என அனைத்தையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றிருக்கின்றனர். படுகாயங்களோடு சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளித்து அதிரச்சியடைந்த நாகை மீனவர்களை. அவ்வழியே வந்த நாகையைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பார்த்துவிட்டு கடலில் தத்தளித்த செருதூர் மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளான கண்ணன், முருகன் உள்ளிட்ட 6 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

 

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வெள்ளப்பள்ளம் மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர், அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்குள் செருதூர் கிராம மீனவர்களை தாக்கப்ப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.