Skip to main content

போலி சான்றிதழ் பெற்று தேர்தலில் போட்டி... வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! 

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காட்டு நாயக்கன் சமூகத்தைச் சார்ந்த மகேஸ்வரி என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என போலியாக சான்றிதழ் வாங்கிதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், அவருடைய வெற்றியை ரத்துசெய்ய வலியுறுத்தியும் அவருக்கு போலியாக சாதி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை சுமார் 300-க்கும் மேற்பட்ட வேப்பூர் காலனி கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

protest

 

போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் வேப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் விரக்தி அடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்று வட்டாட்சியரிடம் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்க சென்றனர்.

அவர்களை அலுவலகத்தின் உள்ளே செல்ல விடாமல் வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் தடுத்ததால் பொது மக்கள் கொந்தளிப்பு அடைந்தனர்.

பின்னர் அங்கு வந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் வட்டாட்சியர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி பொதுமக்கள் கேரிக்கை மனுவை தாசில்தார் கமலா விடம் ஒப்படைத்துவிட்டு கலைந்து சென்றனர்.

இதில் விசிக அர்சுணன், சக்திவேல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விடுதலை வளவன், தமிழ்செல்வன், பாக்யராஜ், சங்கர், சிவகுமர், சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலி சான்றிதழ் விவகாரம்; பெரியார் பல்கலைக்கழகம் அதிரடி

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Fake Certificate Issue Periyar University in action

 

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக பெரியார் பல்கலைக்கழக டெலிபோன் ஆபரேட்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டெலிபோன் ஆபரேட்டராக சக்திவேல் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் இந்த புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் இந்த புகார் உறுதி செய்யப்பட்டதால் டெலிபோன் ஆபரேட்டர் சக்திவேலை சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Next Story

போலி சாதி சான்றிதழ் விவகாரம்; அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

 Fake caste certificate issue; Dismissal from the post of Government Doctor

 

நாமக்கல் அருகே, போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த புகாரின் பேரில் அரசு மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில், வட்டார மருத்துவ அலுவலராக ராஜேந்திரன் (58) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தமிழக பொது சுகாதாரத்துறையில் 1988ம் ஆண்டு மருத்துவர் பணியில் சேர்ந்தார்.

 

அவர் பணியில் சேர்ந்த போது, தான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று கூறி போலி சாதி சான்றிதழ் கொடுத்துள்ளதாக சில ஆண்டுக்கு முன்பு அவர் மீது புகார் எழுந்தது. இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

 

இது தொடர்பான வழக்கு விசாரணை, சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மருத்துவர் ராஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பூங்கொடி, மருத்துவர் ராஜேந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக பொது சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவரை பணியிடை நீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.