Advertisment

குமாியில் மாயமாகும் குமாிகள்...

குமாி மாவட்டத்தில் இளம் பெண்கள் மாயமாகும் சம்பவம் தொடா் கதையாகவே உள்ளது. மொத்தமுள்ள 38 காவல் நிலையங்களில் இளம் பெண்கள் மாயம் இல்லாத புகாரே கிடையாது. இதில் தினம் 3-ல் இருந்து 5 பெண்கள் காணவில்லை என்று காவல் நிலையங்களில் புகாராவது வழக்கம்.

Advertisment

காணாமல் போகும் இளம் பெண்கள் கல்லூாி மாணவிகள், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பாா்க்கிற படித்த பெண்களாகவே உள்ளனா். இதில் மாயமாகும் சில பெண்களின் பெற்றோா்கள் குடும்ப கௌரவத்தை கருத்தில் கொண்டு காவல் நிலையங்களுக்கு செல்லாமல் உறவினா்களோடு தேடுவதும் ஓரு கதையாக உள்ளது. சிலா் காவல் நிலையங்களில் புகாா் கொடுத்தாலும் போலிசாா் பெயரளவுக்கு புகாரை வாங்கி வைத்து விட்டு மேஜா் பெண் தானே என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனத்தில் இருக்கிறாா்கள்.

Advertisment

women

சில காவல்நிலையங்களில் உங்க பொண்ணு காதல் விவகாரத்தில் விருப்பப்பட்டு சென்றிருப்பார். உங்கள் பெண் யாரை காதலித்தார் எங்கு இருக்கிறாா்கள் என்று விசாாித்து விட்டு வாருங்கள் என்று அசால்டா பேசி அனுப்புகிறாா்கள். இதில் சில பெண்கள் போலிசாா் சொன்னது போல் காதலனோடு ஓடி விட்டு ஐந்தாறு நாட்கள் கடந்து காதலனோடு வந்து காவல்நிலையத்தில் சரணடையும் சம்பவங்களும் நடக்கிறது.

காலையில் பெற்றோருக்கு டாட்டா காட்டி விட்டு கல்லூாிக்கு செல்லும் பெண்கள் மாலையில் வீட்டுக்கு வராமல் காதலனோடு செல்லும் சம்பவம் தினம் அரங்கேறி கொண்டியிருக்கிறது. குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தையை தூக்கியெறிந்து விட்டு காதலனோடு மாயமாவதும் பல சம்பவங்கள் உள்ளன.

இப்படி குமாி மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் 120 க்கு மேற்பட்ட இளம் பெண்கள் மாயமானதாக காவல்நிலையத்தில் புகாா் உள்ளது. இதில் அத்தனை பெண்களும் படித்த பட்டதாாிகள் என்பது குறிப்பிட தக்கது. மேலும் காவல் நிலையங்களில் புகாா் இல்லாமலே ஓன்றிரண்டு நாட்களில் திரும்பி வந்த பெண்களும் பலா் உள்ளனா்.

women

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் நேற்று (10-ம் தேதி) மட்டும் ஒரே நாளில் 7 இளம் பெண்கள் மாயமாகி உள்ளனா். இதில் அஞ்சுகிராமம் அருகே பொட்டல் குளத்தை சோ்ந்த செல்வ சிவனைந்த பெருமாள் என்பவரின் 22 வயது மகள் காணாமல் போயிருக்கிறார்.இவர் அழகப்பபுரம் பேருராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். வழக்கம் போல் வேலைக்கு சென்றவள் வீடு திரும்பாததால் பெற்றோா்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா்.

இதேபோல் ஆண்டாா் குளம் பகுதியை சோ்ந்த ஏசுராஜன் மகள் (22) சென்னையில் உள்ள ஒரு கல்லூாியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக ஆண்டாா் குளத்தில் வீட்டில் இருந்த அவரை திடீரென்று காணவில்லை. பெற்றோரும் உறவினா்களும் பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா்.

அழகிய பாண்டிபுரத்தை சோ்ந்த போின்பதாஸ் மகள் (23) நாகா்கோவிலில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். வேலைக்கு செல்வதாக கூறி சென்றவா் வேலைக்கும் செல்லாமல் மாயமானாா். அவர் வேலைக்கு வராததை அந்த நிறுவனத்தினா் பெற்றோருக்கு தொியபடுத்தியதையடுத்து பெற்றோா் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

 contentiously women'a missing in kaniyakumari

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதேபோல் குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சோ்ந்த 25 பெண் ஒருவர் பெற்றோா்கள் வீட்டில் இல்லாத போது திடீரென்று காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் குலசேகரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

மேலும் இரணியலை சோ்ந்த ஒரு பெண், களியலை சோ்ந்தமற்றோரு பெண், மணவாளகுறிச்சியை சோ்ந்த கல்லூாி மாணவி ஒருவர் என இருவர் பெற்றோருக்கு டாட்டா காட்டிவிட்டு காலையில் கல்லூாிக்கு சென்ற இவா்கள் மாலையில் வீடு திரும்பாததால் அதிா்ச்சியடைந்த பெற்றோா்கள் அவா்களுடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாாித்த போது அந்த 3 பேரும் கல்லூாிக்கு செல்லாதது தொிய வந்தது அவா்களை பெற்றோா்களும் உறவினா்களும் சல்லடை போட்டு தேடிவருகின்றனா்.

missing Women women safety Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe