Skip to main content

குமாியில் மாயமாகும் குமாிகள்...

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

குமாி மாவட்டத்தில் இளம் பெண்கள் மாயமாகும் சம்பவம் தொடா் கதையாகவே உள்ளது. மொத்தமுள்ள 38 காவல் நிலையங்களில் இளம் பெண்கள் மாயம் இல்லாத புகாரே கிடையாது. இதில் தினம் 3-ல் இருந்து 5 பெண்கள் காணவில்லை என்று காவல் நிலையங்களில் புகாராவது வழக்கம்.


            

காணாமல் போகும் இளம் பெண்கள் கல்லூாி மாணவிகள், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பாா்க்கிற படித்த பெண்களாகவே உள்ளனா். இதில் மாயமாகும் சில பெண்களின் பெற்றோா்கள் குடும்ப கௌரவத்தை கருத்தில் கொண்டு காவல் நிலையங்களுக்கு செல்லாமல் உறவினா்களோடு தேடுவதும் ஓரு கதையாக உள்ளது. சிலா் காவல் நிலையங்களில் புகாா் கொடுத்தாலும் போலிசாா் பெயரளவுக்கு புகாரை வாங்கி வைத்து விட்டு மேஜா் பெண் தானே என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனத்தில் இருக்கிறாா்கள்.

 

 

women

 
சில காவல்நிலையங்களில் உங்க பொண்ணு காதல் விவகாரத்தில் விருப்பப்பட்டு சென்றிருப்பார். உங்கள் பெண்  யாரை காதலித்தார் எங்கு இருக்கிறாா்கள் என்று விசாாித்து விட்டு வாருங்கள் என்று அசால்டா பேசி அனுப்புகிறாா்கள். இதில் சில பெண்கள் போலிசாா் சொன்னது போல் காதலனோடு ஓடி விட்டு ஐந்தாறு நாட்கள் கடந்து காதலனோடு வந்து காவல்நிலையத்தில் சரணடையும் சம்பவங்களும் நடக்கிறது. 


           

காலையில் பெற்றோருக்கு டாட்டா காட்டி விட்டு கல்லூாிக்கு செல்லும்  பெண்கள் மாலையில் வீட்டுக்கு வராமல் காதலனோடு செல்லும் சம்பவம் தினம் அரங்கேறி கொண்டியிருக்கிறது. குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தையை தூக்கியெறிந்து விட்டு காதலனோடு மாயமாவதும் பல சம்பவங்கள் உள்ளன.
          

 

இப்படி குமாி மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் 120 க்கு மேற்பட்ட இளம் பெண்கள் மாயமானதாக காவல்நிலையத்தில் புகாா் உள்ளது.  இதில் அத்தனை பெண்களும் படித்த பட்டதாாிகள் என்பது குறிப்பிட தக்கது. மேலும் காவல் நிலையங்களில் புகாா் இல்லாமலே ஓன்றிரண்டு நாட்களில் திரும்பி வந்த பெண்களும் பலா் உள்ளனா். 
           

women

 

இந்த நிலையில் நேற்று (10-ம் தேதி) மட்டும் ஒரே நாளில் 7 இளம் பெண்கள் மாயமாகி உள்ளனா். இதில் அஞ்சுகிராமம் அருகே பொட்டல் குளத்தை சோ்ந்த செல்வ சிவனைந்த பெருமாள் என்பவரின் 22 வயது மகள் காணாமல் போயிருக்கிறார்.இவர் அழகப்பபுரம் பேருராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். வழக்கம் போல் வேலைக்கு சென்றவள் வீடு திரும்பாததால் பெற்றோா்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா்.
             

 

இதேபோல் ஆண்டாா் குளம் பகுதியை சோ்ந்த ஏசுராஜன் மகள் (22) சென்னையில் உள்ள ஒரு கல்லூாியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக ஆண்டாா் குளத்தில் வீட்டில் இருந்த அவரை திடீரென்று காணவில்லை. பெற்றோரும் உறவினா்களும் பல இடங்களில் தேடியும் அவரை  காணாததால் சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா். 


              

அழகிய பாண்டிபுரத்தை சோ்ந்த போின்பதாஸ் மகள் (23) நாகா்கோவிலில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். வேலைக்கு செல்வதாக கூறி சென்றவா் வேலைக்கும் செல்லாமல் மாயமானாா். அவர் வேலைக்கு வராததை அந்த நிறுவனத்தினா் பெற்றோருக்கு தொியபடுத்தியதையடுத்து பெற்றோா் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

 

 contentiously women'a missing in kaniyakumari


          

இதேபோல் குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சோ்ந்த 25 பெண் ஒருவர் பெற்றோா்கள் வீட்டில் இல்லாத போது திடீரென்று காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் குலசேகரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

 


மேலும் இரணியலை சோ்ந்த ஒரு பெண், களியலை சோ்ந்தமற்றோரு பெண், மணவாளகுறிச்சியை சோ்ந்த  கல்லூாி மாணவி ஒருவர் என இருவர் பெற்றோருக்கு டாட்டா காட்டிவிட்டு காலையில் கல்லூாிக்கு சென்ற இவா்கள் மாலையில் வீடு திரும்பாததால் அதிா்ச்சியடைந்த பெற்றோா்கள் அவா்களுடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாாித்த போது அந்த 3 பேரும் கல்லூாிக்கு செல்லாதது தொிய வந்தது அவா்களை பெற்றோா்களும் உறவினா்களும் சல்லடை போட்டு தேடிவருகின்றனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.