Skip to main content

நுகர்பொருள் வாணிப கழக சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! 

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டி.என்.சி.எஸ்.சி. தலைமை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். இதில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் (Ex.MLA), அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் மற்றும் நிர்வாகிகளும், தமிழகம் முழுவதிலிருந்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொது வினியோக முறையைப் பலப்படுத்துவது, பருவகால ஊழியர்களை நிரந்தரமாக்குவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, சுமைப்பணி தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணி நிரந்தரம் செய்யக் கோரி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் பேரணி (படங்கள்)

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

பணி நிரந்தரம் கோரி வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் சென்னை எழும்பூரில் பேரணி நடத்தினர். சி.ஐ.டி.யு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சங்கத்தின் தலைவர் கே.விஜயன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

ஒன்றிய அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் 2021ஆம் ஆண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.