Skip to main content

காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Consumer court orders compensation to farmers for non-payment of insurance premium

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் மனைவி சரவணசுந்தரி (வயது 40), கணேசன் மனைவி பத்மபிரியா (வயது 45). இவர்கள் இருவருக்கும் சொந்தமாக தலா இரண்டு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அந்த விளைநிலத்திற்கு 'பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 369 வீதம் இரண்டு ஏக்கருக்கு ரூபாய் 738 என சரவணசுந்தரியும், பத்மபிரியாவும் காப்பீட்டு பிரீமியமாக செலுத்தினர். கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 18,142 ரூபாய் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் சரவணசுந்தரிக்கும், பத்மபிரியாவுக்கும் ஒரு காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

 

இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கிடையில் வழக்கு நிலுவையில் இருந்தபோது சரவணசுந்தரிக்கு காப்பீட்டு நிறுவனம் 35,256 ரூபாய் காலம் தாழ்த்தி வழங்கியது. மீதி தொகையான ரூபாய் 1,136 வழங்கவில்லை. மேலும் அதற்கு எவ்வித காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை.


இவ்வழக்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

 

அதில், காப்பீட்டு நிறுவனம் சரவணசுந்தரிக்கு காலதாமதமாக காப்பீட்டுத்தொகை வழங்கியுள்ளதால் நுகர்வோர் சேவை குறைபாடாக கருதப்படுகிறது. அதனால் காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டிய மீதித் தொகையான ரூபாய் 1,136 மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 25 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 2000 ஆகியவற்றை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

 

இதேபோல் பத்மபிரியாவுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் காப்பீட்டு நிறுவனம் ரூபாய் 36,284 இழப்பீட்டுத் தொகையையும், ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு பாதிப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு ரூபாய் 25 ஆயிரமும் நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 5000 ஆகியவையை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 


இதேபோல் நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரிந்து வந்த காமராஜ் என்பவர் தபால் துறையில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் சேர்ந்து மாதாமாதம் தன்னுடைய சம்பள கணக்கில் இருந்து என்.எல்.சி நிறுவனம் பிடித்தம் செய்யும் 3 சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளார். 3 பாலிசியில் ஒரு பாலிசி தொலைந்து விட்டதால் அதன் நகலை வழங்க வேண்டுமென தபால் துறையை அணுகினார். தொலைந்த பாலிசி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு ஊழியரான பாலசுப்பிரமணி என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. 


உடனே காமராஜ் தபால் துறையை தொடர்பு கொண்டு தான் மாதந்தோறும் 1150 ரூபாய்  சுமார் ஆறு வருடங்களுக்கு பிடித்தம் செலுத்தப்பட்ட தொகை ஆன 66,700  வட்டியுடன் கொடுக்க வேண்டும் என கேட்டபோது தபால் துறையினர் என்.எல்.சி நிர்வாகம் தவறான தொகையை பிடித்து வங்கியில் செலுத்தினால் தாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து காமராஜ் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையீடு தாக்கல் செய்தார். 


இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் சேவை குறைபாடாக கருதி முதலீட்டாளர் காமராஜர் செலுத்திய தொகை 66,700 ரூபாய் அதற்குண்டான 9 சதவீத வட்டியுடன் டிசம்பர் 2009ல் இருந்து, இரண்டு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என்றும் முதலீட்டாளர் காமராஜக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பாதிப்பிற்கு இழப்பீடாக 25 ஆயிரம் வழக்கு செலவுத் தொகையாக 10,000 என மொத்தம் ஒரு லட்சத்து 1,01,700 வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.