பள்ளிகள் திறக்க ஆலோசனை..!

Consultation  to open schools ..!

சென்னையில் இன்று (27.07.2021) நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது,தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு முதல்+2 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்திவருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

“சி.எஸ்.ஆர். சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். தமிழகத்தில் கரோனாவின் 2வது அலை படிப்படியாக குறைந்துவருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்திவருகிறது.” இவ்வாறு தெரிவித்தார்.

anbil mahesh school
இதையும் படியுங்கள்
Subscribe