Skip to main content

வீராணம் ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்! 

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

Consultation meeting on opening water for irrigation in Viranam Lake!

 


சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்திற்கு சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், உதவி கோட்ட பொறியாளர்கள் சிதம்பரம் ஞானசேகரன், அணைக்கரை குமார், உதவி பொறியாளர்கள் ரமேஷ், வெற்றிவேல், புகழேந்தி, முத்துகுமார், சிவராஜ் உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் கீழணை பாசன சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ராதா வாய்க்கால் பாசன சங்கம், கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கம், நாரைக்கால் வாய்க்கால் பாசன சங்கம், வடரெட்டை பாசன சங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால் சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் தற்போது சம்பா நடவு பணிக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கீழணையை கட்டிய கீழணையில் ஆதார் காட்டன் மற்றும்  வீராணம் ஏரியில் வீராணம் ஏரியை வெட்டிய ராஜதித்தன் ஆகியோருக்கு சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாய சங்க தலைவர்கள் மனு அளித்தனர். மேலும் பல இடங்களில் வாய்க்கால் தூர் வாராமல் உள்ளது என்றும் அதனை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயச் சங்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்து பேசினர். இதற்கு பதில் அளித்த செயற்பொறியாளர் காந்தரூபன் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் அணைக்கரையில் ஆதார் காட்டன் சிலையும் வீராணத்தில் ராஜதித்தன் சிலையும் வைக்க அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறினர்.

 

இதனை தொடர்ந்து தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தேதி கிடைத்தவுடன் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து 12ஆம் தேதிக்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இதனை அனைத்து விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், ராமச்சந்திரன், இளங்கீரன், விநாயகமூர்த்தி, ரங்கநாயகி, கண்ணன், தம்புராமச்சந்திரன், சத்தியநாரயணன், கற்பனைச்செல்வம் உள்ளிட்ட அனைத்து பாசன வாய்க்கால்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.