வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் தலைமையில் சென்னை, சேப்பாக்கம், வேளாண்மைத் துறை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 10.00 மணியளவில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நெல் கொள்முதல் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.