Skip to main content

"பான் கார்டுடன்" ஆதார் எண்ணை இணையதளம் மூலம் இணைக்கலாம் !

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

பான் கார்டுடன் (PAN CARD) ஆதார் எண்ணை இணைப்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வங்கியில் டெபாசிட் செய்யும்  பணத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சென்றால் வருமான வரியை செலுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்தது. இதனால் ஒருவரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் போது அவர் மற்ற வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துள்ளரா? எனவும் , எவ்வளவு பணம் டெபாசிட் செய்துள்ளார்? என்பதை வருமான வரித்துறையினர் எளிதாக ஆராயும் வகையில் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை வைத்து இணையதளம் மூலம் கண்டறிய முடியும். இதற்காகவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 

pancard with aadhar

அதே போல் புதிதாக வங்கி கணக்கை (New Bank Account Opening) தொடங்கும் போதும் ஆதார் அட்டையாள அட்டை நகல் மற்றும் பான் கார்டு நகல் வங்கியில் அளித்தால் மட்டுமே புதியதாக வங்கி கணக்கு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இணையதள முகவரி : https://www.incometaxindiaefiling.gov.in/home ஆகும் . இந்த இணையதளத்தை பயன்படுத்தி பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் , ஆதார் அட்டையில் உள்ள பெயரை குறிப்பிட்டு "SUBMIT" செய்தால் "ஆதார் எண் " இணைந்தது என இணையதளத்தில் காட்டும். இதில் பான் அட்டையில் உள்ள பெயர் , பிறந்த தேதி உட்பட அனைத்து தகவலும் ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான தகவல்கள் இருக்க வேண்டும். அப்போது தான் பான் அட்டையில் ஆதார் எண் (Adhaar Number link to Pan Card ) இணையும் என்பதை மறந்துவிட வேண்டாம். 
 

pancard aadhar link

இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா ? என்ற சந்தேகம் எழுந்தால் இணைய தள முகவரி : https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html சென்று பான் எண் மற்றும் ஆதார் எண்ணை குறிப்பிட்டால் இணைந்துள்ளதா? இல்லையா ? என்பதை பார்க்கலாம். தமிழக கிராமப்புற மக்களுக்கு இத்தகைய இணையதளத்தை பயன்படுத்தி இளைஞர்கள் எளிதான முறையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். இதற்காக இளைஞர்கள் தங்கள் பகுதியில் குழு அமைத்து மக்களின் இல்லத்திற்கே சென்று "Android Mobile" யை பயன்படுத்தி இணைக்கலாம். இதனால் அனைவரும் "பான் எண்ணுடன்" ஆதார் எண்ணை இணைப்பது உறுதி செய்யப்படும். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை மக்கள் தவறாமல் செலுத்துவோம் என அனைவரும் உறுதியேற்போம். இந்திய நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்.


பி.சந்தோஷ் ,சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

இரவில் கொட்டும் பனியில் ரேஷன் கடை வாசலில் காத்துக் கிடக்கும் பொதுமக்கள்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
People waiting at the door of ration shop at night to renew Aadhaar card!

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதன்மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 நபர்கள் மட்டுமே தங்கள் ஆதார் எண்ணை தங்களது குடும்ப அட்டையோடு இணைத்துள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு, ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாலும், கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே கைரேகையைப் பதிவு செய்துள்ளதால், மற்றவர்களும் கட்டாயம் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் அவர்கள் பெயர் கார்டில் இருந்து நீக்கப்படும், பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பதட்டமடைந்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதாவது, நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது. விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும். பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் குழப்பமின்றி பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெயர் நீக்கப்படும் என்கிற தகவலை ரேஷன் கடை ஊழியர்கள் திரும்ப திரும்ப பொதுமக்களிடம் கூறி பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அட்டையில் உள்ள பெரியவர்கள், வயதானவர்கள் சென்று கைரேகை வைக்கின்றனர். அதோடு பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளை லீவு போடவைத்து அவர்களை அழைத்துக்கொண்டு சில பெற்றோர்கள் நியாய விலைக்கடை வாசலில் நின்று கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

People waiting at the door of ration shop at night to renew Aadhaar card!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல இடங்களில் இரவு நேரங்களில் நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் கைரேகை வைத்துவருகின்றனர். பணியிலும் வயதானவர்கள் வரிசையில் காத்திருந்து கைரேகை வைக்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கைரேகை வைக்க இறுதி தேதி என அரசு எதுவும் அறிவிக்கவில்லை, கட்டாயம் உடனே வைக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆனாலும், பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு அரிசி வழங்கப்படாது என ஊழியர்கள் தொடர்ச்சியாக தெரிவிப்பதாக குற்றம்சாட்டி வரும் மக்கள், இதன் காரணமாக ஆதார் கார்டு கைரேகை வைப்பதற்காக தொடர்ந்து பொதுமக்கள் இரவு எட்டு மணியில் இருந்து தற்போது வரை காத்துக் கிடக்கும் அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.