சென்னை பெரியமெடு, நேரு ஸ்டேடியம் அம்பேத்கர் சிலை அருகில் அரக்கோணத்தில் நடந்த இரட்டைப் படுகொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,மத்திய பாஜக அரசையும், தமிழக அரசையும் கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை மெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.