ADVERTISEMENT

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னையில் போராட்டம்! (படங்கள்)

12:10 PM Oct 03, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உத்திரபிரதேசத்தில் தலீத் சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல்காந்தியை கைது செய்த உத்திரபிரதேசம் அரசை கண்டித்தும் நேற்று சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மோடியையும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT