Skip to main content

ராகுல் மீது போலீஸ் தாக்குதல்... சாலையில் படுத்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
congress struggle in thiruvannamalai

 

உத்திரபிரதேசத்தில் பட்டியலினத்தை சோ்ந்த இளம்பெண்ணை இளைஞர்கள் 4 பேர், கரும்பு தோட்டத்தில் வைத்து  பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் நாக்கை அறுத்துள்ளனர். அதேநேரத்தில் கழுத்தில் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

கொடூரமாக தாக்கப்பட்ட அந்த இளம்பெண் உயிருக்கு போராடியுள்ளார். சரியான மருத்துவ சிகிச்சை பெறவிடாமல் அரசு தரப்பே தடுத்துள்ளது. கடந்த 14 நாட்களில் உயிர் போராட்டம் நடத்திய அந்த 18 வயது இளம்பெண் இறுதியில் மரணத்தை தழுவியுள்ளார். அந்த பெண்ணின் உடலை பெற்றோர்களிடம் தராமல் நள்ளிரவில் போலீஸாரே கொண்டு சென்று சுடுகாட்டில் வைத்து எரித்து அது சாம்பலாகும் வரை அங்கேயே நின்று பார்த்துவிட்டு பின்பே வந்துள்ளனர்.


அதேபோல் அந்த பெண்ணின் குடும்பத்தாரை காவல்துறை அதிகாரிகள், இதைப்பற்றி பேசக்கூடாது என மிரட்டியும் உள்ளனர். இந்த விவகாரத்தில் உ.பியை ஆளும் பாஜக முதல்வர் யோகிஆதித்யாநாத் அரசு சரியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் அலுவலகத்தின் மிரட்டலால் மருத்துவர்கள், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை, நாக்கு அறுபடவில்லை என்றார்கள். அந்த மாநில காவல்துறை தலைவரோ, கழுத்தில் அடிப்பட்டதால் தான் இறந்தார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாக்கு அறுப்பட்டதை மீடியாவின் ஸ்டிங் ஆப்ரேஷனில் மருத்துவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நியாயம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய இளம் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, அவரது சகோதரி ப்ரியங்காகாந்தி, அந்த குடும்பத்தாரை சந்திக்க கட்சி நிர்வாகிகளுடன் சென்றனர். அப்படி சென்றவர்களை காவல்துறை தடுத்தது. காரில் செல்லதானே தடை, நடந்து செல்கிறேன் என நடைபயணம் மேற்கொண்டனர்.  அவர் பின்னால் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டனர். ராகுல்காந்தியை தடுத்த போலீஸ் அதிகாரிகள் ஒருக்கட்டத்தில் அவரை அடித்து கீழே தள்ளினர். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது காவல்துறையா, ரவுடிகள் படையா என நாடு முழுவதும் கண்டனக்குரல் எழுந்தது.

உ.பியை ஆளும் முதல்வர் யோகியின் கீழ் செயல்படும் காவல்துறையை, ரவுடிகள் படையாக மாறிவிட்டது எனக்கூறி இந்தியா முழுவதும் காங்கிரஸார் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். தமிழகத்திலும் சிலயிடங்களில் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவரும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் முக்கிய நிர்வாகியுமான குமார் தலைமையில் 300க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் திருவண்ணாமலை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீஸார் கைது செய்ய முயல, சாலையில் படுத்துக்கொண்டு, காவல்துறைக்கு எதிராகவும், பாஜகவை கண்டித்தும் குரல் எழுப்பினர்.

செங்கம் போலீஸார் அவர்களை கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.