Skip to main content

நாடாளுமன்ற எம்.பிக்கள் சஸ்பெண்ட்; காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Congress struggle in Erode following the suspension of MP

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தளம் சார்பாக, மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு பாராளுமன்றத்தில் 45 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்தும் 100 நாள் வேலைவாய்ப்பில் நான்கு மாதங்களாகத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தளம் சார்பாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு பாராளுமன்றத்தில் 45 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்தும் 100 நாள் வேலை வாய்ப்பில் நான்கு மாதங்களாகத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கருங்கல்பாளையம் காந்திஜி சிலை அருகே இன்று மாலை ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் ஈரோடு சேவா தள தலைவர் எஸ் முகமது யூசுப், மண்டல தலைவர்களான ஆர். விஜயபாஸ்கர், எச்.எம். ஜாபர் சாதிக் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர்களான ஈ.பி. ரவி, ஈ.ஆர். ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர்களான ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாஜலம், வழக்கறிஞர் பாஸ்கர்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவர் எம். ஜவஹர் அலி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி.எம். ராஜேந்திரன், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி.சி.டி.யூ) துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், மாநில சேவா தள செயலாளர் எம். பேபி, மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம். ஜூபைர் அகமது மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.