ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுதினமான இன்று (21.05.2021) சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பானது நடைபெற்றது.