நீண்ட இழுபறிக்கு பின்பு, ப.சிதம்பரத்தின் பிடிவாதத்திற்கு பணிந்த ராகுல்காந்தி, சிவகங்கையின் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரத்தை டிக் அடித்தார். தொகுதியை எப்படியும் கைப்பற்றிடுவேன் என சவால்விட்டு, ப.சி.க்கு எதிராக பல்வேறு அஸ்திரங்களை பயன்படுத்திய சுதர்சன நாச்சியப்பனால் தொகுதியை கைப்பற்ற முடியவில்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ப.சிதம்பரத்தின் மகனுக்கு சிவகங்கை ஒதுக்கப்பட்டதில் தற்போது செம காட்டத்தில் இருக்கிறார் நாச்சியப்பன். இந்த நிலையில், சிதம்பரத்துக்கு எதிரான தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அவர். தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட நாச்சியப்பன், " ப.சிதம்பரத்தை தேர்தலில் நான் தோற்கடித்தேன் என்பதற்காக எனது அரசியல் வளர்ச்சியை கெடுத்தவர் அவர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மட்டுமல்ல ; ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அதிர்ச்சிதான். சிவகங்கை மக்கள் மட்டுமல்ல ; தமிழக மக்கள் அனைவருமே சிதம்பரம் குடும்பத்தை வெறுக்கின்றனர் ! " என கடுமையாக தாக்குகிறார் நாச்சியப்பன்.
சிவகங்கையில் கோலோச்சும் ப.சிதம்பரம் மற்றும் நாச்சியப்பனின் தனிப்பட்ட கோஷ்டி மோதல்களால் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. அதே சமயம், காங்கிரஸ் தலைவர்களின் இந்த மோதல், பாஜகவை குஷிப்படுத்தியிருக்கிறது.