Skip to main content

காங்கிரஸ் எம்.பி. மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
Congress MP Complain to the District Collector

 

ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் சென்னை திருச்சி நான்கு வழிச்சாலையில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அந்த விபத்து பகுதிகளில் ஒன்பது மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது ஆறு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக எனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு மேம்பாலப் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இப்பணிக்காக 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான இடத்தை கையகப் படுத்துவதற்காக மட்டும் மூன்றரைக் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் இதுவரை மேம்பால பணிகள் துவக்கப்படவில்லை. வரும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள் இப்பணிகள் துவக்கபடாவிட்டால் மக்களை திரட்டி பெரிய அளவில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும் திண்டிவனம் நகரின் இடையே 120 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை செயல்படுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்த திட்டத்தினால் விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என பல்வேறு மாவட்ட மக்கள் போக்குவரத்துக்கு சிரமம் இன்றி சென்றடைவார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் எரிவதில்லை, குடிநீர், தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இவைகளுக்கெல்லாம் சேர்த்துதான் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

Congress MP Complain to the District Collector

 

ஆனால் பராமரிப்பு பணிகள் சுத்தமாக மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும் திண்டிவனம், திருவண்ணாமலை இடையே 2009 ஆம் புதிய ரயில்வே திட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் துவங்கப்பட்டு எட்டு ரயில்வே பாலங்கள் கட்டப்பட வேண்டும். அதில் ஆறு பாலங்கள் கட்டும் பணி 38 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பத்தாண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் அடாவடித்தனமாக பணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளும் கப்பம் கட்டும் முறை உள்ளது.

 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இதுபோன்ற சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். மேற்படி பணிகளை விரைந்து முடித்தால் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இது சம்பந்தமான பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் விஷ்ணு பிரசாத் எம்.பி. புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். மேற்படி பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிந்துரை செய்யுமாறு அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் காத்தவராயன், குமார், சுப்பிரமணி ஆகியோரும் உடன் இருந்தனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.