Skip to main content

காங்கிரஸ் எம்.பி. மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
Congress MP Complain to the District Collector

 

ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் சென்னை திருச்சி நான்கு வழிச்சாலையில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அந்த விபத்து பகுதிகளில் ஒன்பது மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது ஆறு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக எனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு மேம்பாலப் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இப்பணிக்காக 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான இடத்தை கையகப் படுத்துவதற்காக மட்டும் மூன்றரைக் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் இதுவரை மேம்பால பணிகள் துவக்கப்படவில்லை. வரும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள் இப்பணிகள் துவக்கபடாவிட்டால் மக்களை திரட்டி பெரிய அளவில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும் திண்டிவனம் நகரின் இடையே 120 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை செயல்படுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்த திட்டத்தினால் விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என பல்வேறு மாவட்ட மக்கள் போக்குவரத்துக்கு சிரமம் இன்றி சென்றடைவார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் எரிவதில்லை, குடிநீர், தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இவைகளுக்கெல்லாம் சேர்த்துதான் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

Congress MP Complain to the District Collector

 

ஆனால் பராமரிப்பு பணிகள் சுத்தமாக மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும் திண்டிவனம், திருவண்ணாமலை இடையே 2009 ஆம் புதிய ரயில்வே திட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் துவங்கப்பட்டு எட்டு ரயில்வே பாலங்கள் கட்டப்பட வேண்டும். அதில் ஆறு பாலங்கள் கட்டும் பணி 38 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பத்தாண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் அடாவடித்தனமாக பணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளும் கப்பம் கட்டும் முறை உள்ளது.

 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இதுபோன்ற சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். மேற்படி பணிகளை விரைந்து முடித்தால் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இது சம்பந்தமான பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் விஷ்ணு பிரசாத் எம்.பி. புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். மேற்படி பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிந்துரை செய்யுமாறு அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் காத்தவராயன், குமார், சுப்பிரமணி ஆகியோரும் உடன் இருந்தனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.