Skip to main content

''ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது உத்தரப்பிரதேச படுகொலை''-கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

congress KS Alagiri Stuggle

 

உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி, துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தையும், பிரியங்கா காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு ஒன்றிய மோடி தலைமையிலான அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

 

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையை விட உத்தரப் பிரதேசத்தில் அதை விடக் கடுமையான படுகொலை நடைபெற்றுள்ளது''எனக்  குற்றம் சாட்டினார்.

 

 

மேலும் அவர் கூறுகையில், ''மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகளின் போராட்ட களத்தில் காரை விட்டு 4 விவசாயிகள் கொலை செய்துள்ளார். அதனையொட்டி ஏற்பட்ட பிரச்சனையால் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர்.மேலும் ஒருவர் இறந்துள்ளார். மொத்தம் 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை நடந்த பிறகு ஆங்கிலேய அரசு காங்கிரஸ் தலைவர்களைப் படுகொலை நடந்த இடத்தை பார்வையிட அனுமதித்தது. இங்கு பலியான விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை அனுமதிக்காமல் கைது செய்துள்ளனர். அப்படி என்றால் ஆங்கிலேய  ஏகாதிபத்தியத்தைவிட மோடியின் ஏகாதிபத்தியம் கடுமையானது, கொடுமையானது எனப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

 

பிரியங்கா காந்தி  கொலையான விவசாயிகளின் குடும்பத்தையும் சந்திக்காமல் டெல்லிக்குச் செல்லமாட்டேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரைப் பார்ப்பதற்கு விமானம் மூலம் வந்த சத்திஷ்கர் மாநில முதல்வரையும் விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமல் தடுத்துள்ளனர். அவரும் விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்.

 

இதிலிருந்தே தெரிகிறது இந்த நாட்டினுடைய ஜனநாயகம் தவறானவர்களின் கையில் எவ்வாறு பாடுபடுகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. தேசிய அளவில் மோடியின் முகத்தைப் பற்றி பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துள்ளனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்கள் நாம் மோடியைப் போராடி வெற்றி பெறுவோம்'' என்றார். 

 

இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில துணைத் தலைவர்கள் மணிரத்தினம், சேரன், மாநிலச் செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.