congress k sazhagiri

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் வருகின்ற 6 -ஆம் தேதி முதல் வேல் யாத்திரைநடக்க இருப்பதாக, தமிழக பா.ஜ.க அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்பாஜகவினர்.

இந்நிலையில், மனுதர்மம் நூல் குறித்தவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின்பேச்சுக்குஎதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.கவினர் திருமாவளவனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி இருந்தனர். அதேபோல் தமிழகத்தில் பா.ஜ.கவின் வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது எனத் திருமாவளவனும் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் 'ஏர்கலப்பை யாத்திரை' நடத்த இருப்பதாக, தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டிதலைவர் கே.எஸ்.அழகிரி, அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், காங்கிரஸ் சார்பில் நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாட்டுக்காக, 'ஏர் கலப்பை யாத்திரை' விரைவில் நடத்தப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment