Skip to main content

ஓமலூர் தொகுதியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் காங்கிரஸ்!; அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதல்!!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

Congress to field in Omalur constituency after 37 years !; Face to face confrontation with AIADMK !!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் பெரிய கட்சியாக இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிகளை ஒதுக்குவதில் ஆரம்பம் முதலே கடும் இழுபறி நீடித்து வந்தது. முதலில் எத்தனை தொகுதிகள் என்பதில் நீடித்த இழுபறி, ஒரு கட்டத்தில் 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டதுடன் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது.

 

அதையடுத்து, அக்கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்த பல தொகுதிகள் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக இருந்ததால், அத்தொகுதிகளை ஒதுக்குவதிலும் இரு கட்சிகளிடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒருவழியாக, வியாழக்கிழமை (மார்ச் 11) மாலையில் இரு தரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.

 

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் தொகுதியும் ஒன்று.

 

இந்த தொகுதியில், கடந்த 1971 முதல் 2016 வரை நடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் 7 முறை அதிமுகவும், திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.

 

கடந்த 1984ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அன்பழகன் வெற்றிபெற்றார். அப்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது காங்கிரஸ். அதன்பிறகு 1996இல் நடந்த தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. அப்போது நடந்த தேர்தலில் ஓமலூர் தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் ஆர்.ஆர்.சேகரன் வெற்றிபெற்றார். என்றாலும், ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு நேரடியாக ஓமலூர் தொகுதியில் போட்டியிடவில்லை.

 

வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள ஓமலூர் தொகுதியில் போட்டியிட திமுக பெரிதும் ஆர்வம் காட்டியது. எனினும், அடித்துப் பிடித்து இந்த தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறது காங்கிரஸ். 1984க்குப் பிறகு அதாவது, கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமலூரில் காங்கிரஸ் களம் காண்கிறது. இத்தொகுதியில் அதிமுகவுடன், காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது.

 

Congress to field in Omalur constituency after 37 years !; Face to face confrontation with AIADMK !!

 

திமுக சார்பில் இளைஞரணி அருண் பிரசன்னா, சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் குபேந்திரன், தளபதி நற்பணி மன்ற நிர்வாகி மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசு உட்பட பலரும் சீட் கேட்டிருந்தனர். எல்லோருமே 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யவும் தயாராக இருந்தனர். இந்நிலையில், ஓமலூர் தொகுதி திமுகவின் கையை விட்டு 'கை'க்குப் போனதில் ரொம்பவும் அப்செட் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 12) அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக, ஓமலூர் தொகுதியில் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.