இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், “பணம் செலுத்தியவர்களுக்கு மயிலாப்பூர் நிதி நிறுவனம் சார்பில் வேதநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதங்களாக வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துள்ளது. கடந்த 125 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிறுவனத்தில் தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளார். இந்தப் புகார் குறித்து தேவநாதனை விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் தாமரை சின்னத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.