Skip to main content

ஆள் மாறியதால் குழப்பம்... அப்பாவி கொலை!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021
Confusion over change of person ... Innocent person passes away

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது துத்திப்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், இவரது மகன் வாசு(21). அதே ஊரை சேர்ந்தவர் சுகுமார்(27) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாசுவின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். மறுநாள் சுகுமார், வாசுவின் தந்தை கண்ணனிடம் சென்று உங்கள் மகன் வாசு தனது செல்போனை என்னிடம் ஆயிரம் ரூபாய்க்கு  அடமானம் வைத்துள்ளார். பணத்தைத் தந்துவிட்டு செல்போனை வாங்கி செல்லவில்லை. எனவே உங்கள் மகனுக்கு பதிலாக நீங்கள் எனக்கு சேர வேண்டிய ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு உங்களது மகனின் செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

 

 அதற்கு கண்ணன் என்னிடம் தற்போது பணம் இல்லை பணம் வரும்போது கொடுத்துவிட்டு செல்போனை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணம் தராமல் கண்ணன் காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுகுமார் மதுபோதையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை என்பவரது வீட்டு திண்ணையில் இரவில் வாசுவின் தந்தை கண்ணன் படுத்து தூங்குவது வழக்கம். கண்ணன் தான் செல்லத்துரை வீட்டு திண்ணையில் படுத்துத் தூங்குகிறார் என நினைத்து அந்தத் திண்ணையில் படுத்திருந்த நபரை சுகுமார் உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் அங்கு படுத்திருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுத்து தூங்கியவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பார்த்தபோது அவர் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 65 வயது ஆறுமுகம் என்பது தெரியவந்தது. கண்ணன் என நினைத்து  சுகுமார் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்த சம்பவம் குறித்த தகவல் அனந்தபுரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக செஞ்சி டி.எஸ்.பி இளங்கோவன் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கொலை செய்த சுகுமாரை கைது செய்துள்ளனர். கண்ணனுக்கு பதில் ஆறுமுகத்தை அடையாளம் தெரியாமல் சுகுமார் மதுபோதையில் அடித்து கொலை செய்த ஆள் மாறாட்ட கொலை சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.