Skip to main content

சூதாட்ட கும்பலுக்குள் ஏற்பட்ட மோதல்! இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த அவலநிலை!  

Published on 26/07/2021 | Edited on 26/07/2021
Conflict within the gambling gang! Tragedy for the inspector

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ஞானசேகரன் என்பவர் தனது நண்பர் பாலாஜி, சிவக்குமாருடன் வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென ஞானசேகரன் காரை மடக்கி காரில் இருந்தவர்களை சரமாரியாக அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி, காரில் இருந்த 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

 

அந்த சமயம் இரு கார்களில் இருந்தவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு, கார் கண்ணாடி உடைந்தது. இதில் ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் வீசியுள்ளார். இதனால் கொள்ளையர்களால் காரில் தப்பமுடியாமல் அங்கிருந்து பணத்துடன் நடந்து தப்பித்தனர். சம்பவம் குறித்து ஞானசேகரன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிராமிய போலீஸார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

Conflict within the gambling gang! Tragedy for the inspector

 

கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் வழக்கறிஞர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் கார் பதிவெண்ணை பார்த்தபோது அதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்ட 2 பதிவு எண்கள் பொருத்திய நம்பர் பிளேட் இருந்தது. மேலும், காருக்குள் பான்கார்டு, ஆதார் அட்டைகள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் தொப்பி உள்ளிட்டவை இருந்ததைக் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் ஞானசேகரன் குடியாத்தம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்ததாகவும் அதில் வெற்றிபெற்ற பணம் சுமார் 25 லட்சம் ரூபாய் கொண்டுவந்ததாகவும் இதனால் ஏற்பட்ட மோதலால் பணம் 11 லட்சம் கொள்ளை போயுள்ளது தெரியவந்துள்ளது.

 

கொள்ளையர்கள் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சூதாட்ட க்ளப் நடப்பதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.