Advertisment

கிராம சபை கூட்டத்தில் கைகலப்பு!

Conflict in grama saba meeting

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி கடலூர் மாவட்டம், அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்லாம்பாக்கம் ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவி கணவர் வீரமணி உட்பட கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் துணைத் தலைவரின் கணவர் வீரமணி ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் நீங்கள் கணக்கு கேட்க முடியாது தேவையென்றால் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக உள்ள உங்களது மனைவி வந்து கேட்கட்டும் என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அங்கு கூடியிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் வாக்குவாதம் முற்றி அவர்கள் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராம சபை கூட்டத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து தீவிர விசாரண நடத்தி உள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe