Skip to main content

இரு கண்கள் போனாலும் முடங்கிவிடாத தன்னம்பிக்கை... மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சீனிவாசன்...!!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தி.ரா.பெரியசாமி தோழர்  -  விசாலாட்சி தம்பதிகளின் மகன் சீனிவாசன். 8.8.1974 ல் பிறந்தார். விவசாய குடும்பம். பள்ளி படிப்பை முடித்தவர் பிழைப்பிற்காக அறந்தாங்கியில் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கிடம் வேலைக்கு சென்றார். தொழில் கற்றுக் கொண்ட நிலையில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் தனியாக கடை திறந்தார். மோட்டார் சைக்கிள் பழுது நீக்குவதில் வல்லவராக இருந்தார்.

 

pudukottai

 

2003 ல் தான் பழுது நீக்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்கச் சென்றார். மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூக்கு, வாய், காதில் ரத்தம் கொட்டியது. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என்று நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். சீனிவாசனின் நிலையை பார்த்த மருத்துவர்கள் பிழைக்க வழியில்லை. சொந்தங்களுக்கு சொல்லிவிட்டு தூக்கிச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டதால் நண்பர்கள் கதறி அழுதனர். அதே நேரத்தில் அவரது நண்பனின் அண்ணன் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பணி செய்பவர் வந்து பார்த்துவிட்டு சிகிச்சைகள் செய்வோம் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு சிகிச்சையை தொடங்கினார். 

 

 confident motorcycle mechanic Srinivasan ... !!


சக மருத்துவர்களும் துணையாக சிகிச்சை செய்த 13 நாட்களுக்கு பிறகு தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையில் சோதனைகளுக்காக கொண்டு சென்ற போதுதான் தான் நினைவு திரும்பியது. தான் மருத்துவமனைக்கு எதற்கு வந்தோம் என்பது கூட தெரியவில்லை. அருகில் இருந்த அக்கா ஜீவரத்தினம் ஆனந்த கண்ணீர் வடித்தார். தன் தம்பிக்கு நினைவு திரும்பியது என்பதால்.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பலகட்ட சோதனைகளுக்கு பிறகு மருத்துவர்கள் சொன்னது.. தலையில் பலமாக அடிபட்டிருப்பதால் கண்ணுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டுவிட்டது. படிப்படியாக பார்வை இழப்பு ஏற்படும் என்று சொல்லிவிட்டார்கள். அதே போல பார்வை குறையத் தொடங்கியது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பெங்களூர் என்று 3 வருடங்கள் தொடர்ந்து சிகிச்சைக்காக சென்றும் பலனில்லை முற்றிலும் பார்வை குறைந்துவிட்டது.

இந்த நிலையில் அடுத்த இடியாக அப்பாவும் இறந்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் அம்மாவுக்கும் புற்றுநோய் பாதிப்பு எற்பட அக்கா அவரை சென்னை அடையாறில் வைத்துக் கொண்டு கவனிக்க தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. ஆனாலும் துவண்டுவிடவில்லை சீனிவாசன்.

 

 confident motorcycle mechanic Srinivasan ... !!

 

பார்வை இழப்பு தானே.. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு நண்பர்களை அழைத்து மோட்டார் சைக்கிள் பாகங்களை காட்டச் சென்னார். அதற்கான டூல்ஸ்களையும் எடுத்துத் தரச் சொல்லி கழட்டி மாட்டினார். இது கொஞ்ச காலம், அடுத்து தானே எல்லாவற்றையும் செய்யத் தொடங்கிவிட்டார். அதில் கிடைத்த வருமானத்தை தன் அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக பணம் அனுப்பி வைத்தார். 5 வருடங்கள் போராட்டம்.. புற்றுநோயின் வீரியம் அதிகமாகி அம்மாவும் இறந்துவிட்டார்.
 

அதன் பிறகு தாயும், தந்தையுமாக இருந்து சகோதரி ஜீவரத்தினமே தன்னை கவணித்துக் கொள்கிறார். இந்த நிலையில் அவருக்கும் ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சொல்ல.. தனக்கு உள்ள குறைபாடுகளை சொல்ல பெண் கேளுங்கள். அவர்கள் சம்மதித்தால் பிறகு திருமணம் என்று சொல்லிவிட்டார். அதேபோல சொன்ன பிறகு எல்லாவற்றையும் அறிந்த கலா திருமணத்திற்கு சம்மதித்து கடந்த ஆவணியில் திருமணமும் முடிந்தது.

இது குறித்து சீனிவாசன் கூறும் போது.. விபத்தில் பார்வை இழப்பு ஏற்பட்டதும் துவண்டுதான் போனேன். வாழ்க்கையே இருண்டு போனதேனு பகல் இரவு பாராமல் கலங்கி அழுதேன். ஆனால் இயற்கை நமக்கு கொடுத்தது இவ்வளவு தான் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். நம்மாலும் வாழ முடியும், பழையபடி மோட்டார் சைக்கிள் பழுது நீக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நண்பர்களை துணைக்கு வைத்துக் கொண்டு கொஞ்ச நாள் பழகினேன். அதன் பிறகு எல்லாம் பழகிவிட்டது. இப்ப எந்த மோட்டார் சைக்கிள் எஞ்சினாக இருந்தாலும் தனி ஆளாக பிரிச்சு மாட்டுவேன். துணை தேவை இல்லை. என் வேலையை பார்த்துவிட்டு எனக்கென்று வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய வண்டி முதல் இப்ப வரும் லேட்டஸ்ட் வண்டி வரை எல்லாம் பழுது நீக்க முடியும். 

எஞ்சின் கழட்டி மாட்ட சில உபகரணங்கள் இல்லாமல் வேற மெக்கானிக்களிடம் ஓசி வாங்கி வந்து கழட்டி மாட்டுவேன். ஒரு நாள் அதைப் பார்த்த குளமங்கலம் பாரதப் பறவைகள் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் வந்து பார்த்திருக்காங்க. நான் வேலை செயவதைப் பார்த்துவிட்டு எஞ்சின் கழட்டி மாட்டும் அனைத்து உபகரணங்களையும் வாங்கி கொடுத்து உதவி உள்ளனர்.

எனக்கு அரசாங்கம் மாதாந்திர உதவித் தொகை கிடைக்கிறது. ஆனால் ஸ்பேர்ஸ் வாங்கி வைக்க வங்கி கடன் உதவிகள் கிடைத்தால் அதை வைத்து என்னால் இன்னும் வளர முடியும். அந்த உதவி கிடைத்தால் நல்லது. இப்ப வரை எனக்கு தாய் தந்தையாக என் சகோதரி ஜீவரத்தினம் தான் இருக்காங்க. மனைவி கலாவும் என்னை நல்லா கவனிச்சிகிறாங்க. நண்பர் உதவியும், துணையும் நல்லா கிடைக்கிறது. எனக்க பார்வை இல்லை என்ற நினைவுகளே இல்லை. யாராவது அதைப் பற்றி பேசினால் தான் தெரியும். நமக்குள் உள்ள எந்த குறையும் குறையில்லை. தன்னம்பிக்கை இருந்தால் குறைகளையும் நிறைகளாக மாற்ற முடியும் என்றார் நம்பிக்கையோடு..

அவரது வாழ்க்கைக்கு உதவி நினைத்தால் உதவிகள் செய்யலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.