Skip to main content

“எனக்கு எய்ட்ஸ் இருக்கு...” - போலீசை பதற வைத்த குற்றவாளி

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

confession of lover who passed away girlfriend in Mumbai

 

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 56 வயது மனோஜ் சஹானி என்பவரும் 36 வயதான சரஸ்வதி வைத்தியா என்பவரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டூகெதரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், நயா நகர் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, அதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்றனர். அங்கு தரையில் பிளாஸ்டிக் பைகளிலும் போர்வையிலும் சுற்றப்பட்ட உடல் பாகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவை அனைத்தையும் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த உடல் சரஸ்வதி வைத்தியாவுடையது என்று உறுதி செய்த போலீசார், அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதையும், அதில் சில பாகங்களை குக்கரில் வேக வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.

 

இதனிடையே மனோஜ் சஹானி தலைமறைவானார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு எந்த தகவல் கிடைத்தாலும் தெரிவிக்கும்படியும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோஜ் சஹானி, மீரா பயந்தரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றியுள்ளார். அப்போது கடைக்கு வந்த சரஸ்வதி வைத்தியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆதரவற்றவர்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். அதன்பிறகு கோயிலில் திருமணம் செய்து கொண்ட சரஸ்வதி வைத்தியாவும் மனோஜ் சஹானியும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் துவங்கினர்.

 

இருவருக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால், மனோஜ் தனது தாய் மாமா என்றே அக்கம் பக்கத்தினரிடம சரஸ்வதி கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசிடம் இருந்து தப்பிக்கவே சடலத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினேன். எனக்கு சரஸ்வதி மகள் மாதிரி எனவும், கணவன் மனைவியாக வாழவில்லை என மனோஜ் போலீஸிடம் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் வழக்கின் போக்கை மாற்றத்தான் இப்படி மாற்றி மாற்றிப் பேசுகிறாரோ என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்