Skip to main content

‘ட்ரான்ஸ் கிச்சன்’ கொலை வழக்கு குற்றவாளியின் வாக்குமூலம்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

Confession of the culprit in the 'Trans Kitchen case!


கோவை ‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் 23 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கீதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதற்கு சங்கீதா காவல்துறையில் புகார் கொடுத்துவிடுவேன் எனத் தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா, கோவை சாய்பாபா காலனியில் வசித்துவந்துள்ளார். இவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் திருநங்கைகளுக்காக ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரத்தியேக உணவகத்தை நடத்திவந்தார். இந்த உணவகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களே பணியில் இருந்துள்ளனர்.


இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் தொலைப்பேசியில் கடைசியாகப் பேசியுள்ளார். அதற்குப் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியாமல் அவரது உணவகப் பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர் எங்காவது ஊருக்குச் சென்றிருப்பார் என அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், இரண்டு நாட்களாக அவரை தொடர்புகொள்ள முடியாததால், புதன்கிழமை காலை அவரது வீட்டிற்குச் சென்று அவரது நண்பர்கள் பார்த்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால், அவர்கள் சாய்பாபா காலனி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 


அதனைத் தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர். சங்கீதாவின் வீட்டிற்குள் சென்று துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது எனத் தேடி பார்த்தபோது, தண்ணீர் பிடித்துவைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து வருவதை உணர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதை சோதனை செய்தபோது, சங்கீதாவின் உடல் அதில் இருந்தது தெரியவந்தது. அவரது உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்களும், கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட காயமும் இருந்துள்ளது. இதனால் இதை கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து, சங்கீதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

இந்த கொலை வழக்குத் தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திவந்தனர். அதில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த, ராஜேஷ் (23) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

cnc

 

பிடிப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது முகநூல் மூலம் சங்கீதா மற்றும் அவர் நடத்தி வரும் உணவகம் குறித்து தெரியவந்தது. அதன்மூலம் தனக்கு வேலை வேண்டும் எனக் கூறி சங்கீதாவிடம் பேசியுள்ளார். பிறகு அவரது உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அதன்பிறகு சங்கீதாவுக்கு பாலியல் ரீதியாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், காவல்துறையிடம் புகார் தந்துவிடுவேன் என சங்கீதா தெரிவித்துள்ளார். அதானால், அவரை கொலை செய்தேன். பின் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்மில் சங்கீதாவின் உடலை மறைத்து வைத்தேன் எனத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.