தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது இந்தத் திட்டத்தில் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை வடமாநில ஆண்களுக்கு கொடுத்து நடத்துனர் மோசடி செய்ததாக புகார் எழுந்தநிலையில், இது தொடர்பாக போக்குவரத்துத்துறைஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் இலவச டிக்கட்டை வடமாநில ஆண்களுக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த நடத்துனர் நவீன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.