Skip to main content

மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசு; கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Condemning the central government for taking away state rights struggle in Cuddalore

ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகள் மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பதும், போதிய நிதி வழங்க மறுப்பதுடன், மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிப்பதும், அரசமைப்பு சட்ட விழுமியங்களை மீறுவதும், கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது போன்ற நாசகர வேலைகளை ஒன்றிய மோடி அரசு செய்து வருகிறது.

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி அரசுகளை செயல்படாமல் முடக்கம் செய்து வருகிறது என்று இதனை கண்டித்து கடலூர் ஜவான்பவன் அருகே நேற்று(8.2.2024) நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார்.

மாநகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆர்.அமர்நாத், ஆர்.பஞ்சாட்சரம், எம்.சிவானந்தம், எம்.பி. தண்டபாணி, ஆர். உத்திராபதி, எஸ். கே.ஏழுமலை, எம். ஜெயபாண்டியன், எஸ்.கே.பக்கீரான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், வி. உதயகுமார், எம். மருதவாணன், பி. கருப்பையன், வி.சுப்பராயன், ஆர். ராமச்சந்திரன், எஸ்.திரு அரசு, என்.எஸ். அசோகன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், பி. தேன்மொழி, ஜெ.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, மாநகர செயலாளர்  கே.எஸ்.ராஜா, அவைத் தலைவர் பழனிவேல், மதிமுக மாவட்ட செயலாளர் என். ராமலிங்கம், திமுகவைத் தலைவர் பழனிவேல், விடுதலை சிறுத்தை கட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர செயலாளர் செந்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஏ.எஸ். சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர் தமிழக வாழ்வு கட்சியின் அருள் பாபு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் வி.குளோப்,  திராவிட கழகத்தின் எழிலேந்தி, தமுமுக மாவட்ட செயலாளர் ரஹீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.