Skip to main content

வாய்காலில் கான்கிரீட் தளம்...- இரு பிரிவாக மோதும் விவசாயிகள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

 Concrete floor in the drain ...! -Farmers clashing in two divisions

 

ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பெரிதும் பூர்த்தி செய்வது பவானிசாகர் அணையில் இருந்து வரும் நீரான கீழ்பவானி வாய்க்கால் தான். சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் 5 லட்சம் மக்களின் குடிநீருக்கு ஆதாரமே இந்த வாய்க்கால் தான். கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்த அதில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ரூபாய்  710 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 

இந்நிலையில், அந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் அதன் இருபுறமும் உள்ள பல லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரம் பெற்று வரும் 100 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் அந்த வாய்க்கால் முடிவடையும் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வாய்க்காலை நவீனப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 Concrete floor in the drain ...! -Farmers clashing in two divisions

 

வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்ககூடாது என வலியுறுத்தி வரும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் பாசனதாரர்கள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோருடன் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் 11 ந் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இரு தரப்பு விவசாய அமைப்பினரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.

 

கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக அரசை பொறுத்தவரை இப்பிரச்னையில் நடுநிலையாகவே செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாய்க்காலின் மேல் பகுதி விவசாயிகள் முதல் கடைமடை விவசாயிகள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாய்க்காலின் தரைப்பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட மாட்டாது. கரை பலவீனமாக உள்ள பகுதிகளிலும், கரை உடைந்துள்ள பகுதிகளிலும் மட்டுமே கான்கிரீட் அமைக்கப்படும். மேலும், மதகுகள் சீரமைக்கப்படும். தேவையான இடங்களில் படித்துறைகள் அமைத்தல், வாய்க்காலின் குறுக்கே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறு பாலங்களை, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றியமைத்தல், கடைமடை வரை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

 

 Concrete floor in the drain ...! -Farmers clashing in two divisions

 

மேலும், எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறித்த பட்டியலும் கீழ்பவானி பாதுகாப்பு இயக்கத்தினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் மாற்றங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என பாசனதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவிக்குமாறு  கேட்டுள்ளோம்" என்றார்.

 

வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என ஒரு தரப்பும், அமைத்தால் விவசாயிகள் திரண்டு அரசுக்கு எதிராக போராடுவோம் என மற்றொரு தரப்பு விவசாய அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பதால் வாய்க்கால் கான்கிரீட் தள விவகாரம் விவசாயிகளை இரு பிரிவாக மாற்றியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.