Skip to main content

ஊராட்சி ஒன்றியங்களில் பணி செய்து வரும் கணினி இயக்குனர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Computer directors working in Panchayat Unions across Tamil Nadu should be made permanent ....

 

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் அடங்கிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிகளின் சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மேலும் பல ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு தங்கள் ஊழியர்களின் கோரிக்கை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அப்போது ஊழியர்கள் தரப்பில் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

 

அதில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் உள்ள 41 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர் வாட்டர் டேங்க் இயக்குனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களைப்போன்ற பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்வதாக அறிவித்து அறிவிப்போடு மட்டும் உள்ளது. அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். மாவட்ட வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான பணி நியமனம் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நீண்ட காலமாக கணினி இயக்குபவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இப்படி பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

பொதுவாக வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை சுகாதாரத்துறை இப்படி பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிறைய உள்ளன. ஒவ்வொரு அலுவலகங்களிலும் ஒரு சிலர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். அங்கு பணி செய்யும் பலர் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அப்படி நீண்டகாலம் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வருவோர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கம்யூனிஸ்ட் இயக்கங்கள் உட்பட பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன தமிழக அரசு இதற்கு நிரந்தரத் தீர்வு காணுமா என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.