Skip to main content

மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிவாரணம் ஆவணங்கள் சமப்பிக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டும்

Published on 15/02/2019 | Edited on 15/02/2019
f


    மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரணத் தொகைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஏ.ராமையன்,  செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. 

 

கடந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவனையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.  முதல் தவனையை வழங்குவதற்கு நில உரிமையளர்களின் கணினி சிட்டா, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், உள்ளிட்ட ஆவணங்களை பிப்ரவரி .15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த நேரமும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அவசர, அவசரமாக வினியோகித்து வாக்குகளைத் கவரும் தந்திரம் இதில் அடங்கி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

 

அதே நேரத்தில் கணினி சிட்டா கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் கணினி சிட்டா பதிவிறக்கம் செய்யப்படுவதால் நெட்வொர்க் பிரச்சினை உள்ளது. இதனால், மக்கள் பல மணி நேரங்களாக கணினி மையங்களில் காத்திருக்கின்றனர். இதனால், பல விவசாயிகள் உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

 

    அதே போல ஒவ்வொரு கிராமத்திலும் பல விவசாயிகள் வங்கி கணக்கு இல்லாமல் உள்ளதால் தற்போது அவசரமாக வங்கிகளில் கணக்கு தொடங்கி வருகின்றனர். அதனால் வங்கி பணிகளும் முடங்கியுள்ளதால் கணக்கு தொடங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதனால் ஆவணங்களை சமர்பிக்க முடியாத விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். மேலும், இதையொட்டி ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் ஆவணங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
            

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.