Composer Ilayaraja complains against Prasad studio owner for 'damaging music notes'

பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறைஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

கடந்த45 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைத்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தன்னைஇடத்தைக் காலி செய்யச் சொல்லிதொல்லைசெய்வதாக ஏற்கனவேஇசையமைப்பாளர்இளையராஜாவழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில்,நீதிமன்றம்இரு தரப்பையும்சமரசம் செய்ய முயற்சி எடுத்தும், பலனலளிக்கவில்லை.அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசைக் குறிப்புகள், நோட்ஸ்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைச் சேதப்படுத்தியதாகபிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார் இளையராஜா.

Advertisment

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சட்டத்தை மீறி ஸ்டூடியோஉரிமையாளர்செயல்பட்டிருக்கிறார். எனவே சட்டத்தை மீறி செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் இளையராஜாவுக்குஒதுக்கப்பட்ட அறையின் சாவி இளையராஜாவிடம்இருக்கும்போது,அவரின்அறை உடைக்கப்பட்டு இசைக்குறிப்புகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் புகாரில்கூறப்பட்டுள்ளது.