Advertisment

புதுக்கோட்டையில் 24 முதல் 31ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்!

b

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்துள்ளது. இரண்டாயிரத்திற்கும்மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe