Skip to main content

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி சன்னதியில் கொலை ஆயுதங்களுடன் படம் எடுத்துக் கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019


திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமாக பல இடங்களிலும் கோயில்கள், சொத்துகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில். இந்த கோயிலுக்கு பல வேலி நிலங்கள் சொந்தமாக உள்ளது. அந்த நிலங்களில் இருந்து வாரமாக வரும் நெல் மற்றும் தானியங்களை  வைக்க தானியக் கிடங்கும் உள்ளது. இப்படியான சிறப்பு மிக்க கோயிலுக்கும் ஒருவர் அடிக்கடி வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சுவாமி சன்னத்தியல் நின்ற படம் எடுத்துள்ளது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


 

Complaint to take action against the person taking the photos with weapon at Atmanadaswamy shrine

 

இது குறித்து ஆவுடையார்கோயிலை சொந்த ஊராக கொண்ட சென்னையில் வசிக்கும் திருநீலகண்டன் என்பவர் காவல்துறை மத்திய மண்டல ஐ.ஜி, திருச்சி சரக டி.ஐ.ஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். 
 

அந்த மனுவில்.. ஆவுடையார்கோயில் சுற்றியுள்ள பல கிராமங்களில் சொத்துகள் உள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள கடைகளும் கோயிலுக்கு சொந்தமானது. ஆனால் அத்தனை சொத்துக்களையும் ஆதினத்தில் இருந்து முறையாக பராமரிக்கவில்லை. சிலர் தாங்கள் தான் ஆதினத்தின் அதிகாரி என்று சொல்லிக் கொண்டு ரசீது புத்தகம் வைத்துக் கொண்டு சொத்துக்களை தனியார் நபர்களுக்கு தாரை வார்த்து வருகின்றனர். தற்போது கூட வெள்ளாற்று பாலம் அருகே எசமங்கலம் கிராமத்தில் 128 – 2, 129 – 2 ஆகிய பல எண்களில் உள்ள சொத்துக்களை பலரும் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த தகவல் ஆதினத்திற்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
 

Complaint to take action against the person taking the photos with weapon at Admanadaswamy shrine

 

தற்போது முத்துக்கிருஷ்ணன் என்பவர் தன்னை திருவாடுதுறை ஆதீனத்தின் தென் மண்டல மேலாளர் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலுக்குள் சென்று பெரிய வீச்சரிவாள், கத்தி போன்ற கொலை ஆயுதங்களுடன் கோயில் சன்னதியில் நின்று படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவ்விட்டதால் கோயில் ஊழியர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

முத்துக்கிருஷ்ணனின் இந்த செயல் ஆதீனத்தின் மாண்மை கெடுக்கும் விதமாக உள்ளது. இந்த தகவல்கள் ஆதீனத்திற்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் பற்றி புகார் கொடுக்க முயன்றதால் பலர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் முத்துக்கிருஷ்ணன் பற்றி புகார் கொடுக்க கூடாது என்றும் சிலர் போனில் மிரட்டி வருகின்றனர். அதில் ஒருவர் போலிசார் என்றும் சொல்கிறார்.ஆகவே ஆதீனத்தின் மாண்மை கெடுக்கும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.