Skip to main content

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி சன்னதியில் கொலை ஆயுதங்களுடன் படம் எடுத்துக் கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019


திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமாக பல இடங்களிலும் கோயில்கள், சொத்துகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில். இந்த கோயிலுக்கு பல வேலி நிலங்கள் சொந்தமாக உள்ளது. அந்த நிலங்களில் இருந்து வாரமாக வரும் நெல் மற்றும் தானியங்களை  வைக்க தானியக் கிடங்கும் உள்ளது. இப்படியான சிறப்பு மிக்க கோயிலுக்கும் ஒருவர் அடிக்கடி வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சுவாமி சன்னத்தியல் நின்ற படம் எடுத்துள்ளது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


 

Complaint to take action against the person taking the photos with weapon at Atmanadaswamy shrine

 

இது குறித்து ஆவுடையார்கோயிலை சொந்த ஊராக கொண்ட சென்னையில் வசிக்கும் திருநீலகண்டன் என்பவர் காவல்துறை மத்திய மண்டல ஐ.ஜி, திருச்சி சரக டி.ஐ.ஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். 
 

அந்த மனுவில்.. ஆவுடையார்கோயில் சுற்றியுள்ள பல கிராமங்களில் சொத்துகள் உள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள கடைகளும் கோயிலுக்கு சொந்தமானது. ஆனால் அத்தனை சொத்துக்களையும் ஆதினத்தில் இருந்து முறையாக பராமரிக்கவில்லை. சிலர் தாங்கள் தான் ஆதினத்தின் அதிகாரி என்று சொல்லிக் கொண்டு ரசீது புத்தகம் வைத்துக் கொண்டு சொத்துக்களை தனியார் நபர்களுக்கு தாரை வார்த்து வருகின்றனர். தற்போது கூட வெள்ளாற்று பாலம் அருகே எசமங்கலம் கிராமத்தில் 128 – 2, 129 – 2 ஆகிய பல எண்களில் உள்ள சொத்துக்களை பலரும் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த தகவல் ஆதினத்திற்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
 

Complaint to take action against the person taking the photos with weapon at Admanadaswamy shrine

 

தற்போது முத்துக்கிருஷ்ணன் என்பவர் தன்னை திருவாடுதுறை ஆதீனத்தின் தென் மண்டல மேலாளர் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலுக்குள் சென்று பெரிய வீச்சரிவாள், கத்தி போன்ற கொலை ஆயுதங்களுடன் கோயில் சன்னதியில் நின்று படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவ்விட்டதால் கோயில் ஊழியர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

முத்துக்கிருஷ்ணனின் இந்த செயல் ஆதீனத்தின் மாண்மை கெடுக்கும் விதமாக உள்ளது. இந்த தகவல்கள் ஆதீனத்திற்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் பற்றி புகார் கொடுக்க முயன்றதால் பலர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் முத்துக்கிருஷ்ணன் பற்றி புகார் கொடுக்க கூடாது என்றும் சிலர் போனில் மிரட்டி வருகின்றனர். அதில் ஒருவர் போலிசார் என்றும் சொல்கிறார்.ஆகவே ஆதீனத்தின் மாண்மை கெடுக்கும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.