Skip to main content

காதல்... திருமணம்... பிரிவு... நகராட்சி ஆணையர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

 

வேலூர்மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர் குடியாத்தம் நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு குடியாத்தம் நகராட்சியின் ஆணையாளராக பணியாற்றிய செல்வ பாலாஜி, ரோஜா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் இருவரையும் சில முறை தனிமையில் இருக்க வைத்துள்ளது. அதனை தொடர்ந்து ரோஜா, செல்வபாலாஜிக்கு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்மென நெருக்கடி தந்துள்ளார்.

 

vellore



 

அதனை தொடர்ந்து, கடந்த 3-5-2019 ஆம் ஆண்டு அன்று ரோஜாவை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி  ஆகிய இருவரும் பள்ளிகொண்டாவில் உள்ள  ரங்கநாதர் ஆலயத்தில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை அரசு துறை ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றம் செல்வபாலாஜியின் தாயார் ஒப்புக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் இடையே சமாதானம் பேசி பிரிக்க முயன்றனர். இருவரும் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் ரோஜாவின் பின்னால் இருந்த குடியாத்தம் நகர அதிமுகவின் முக்கிய பிரமுகர் அரசியல் செய்ய தொடங்கினார்.
 

இதனால் விவகாரம் பெரியதானது. அதனை தொடர்ந்து காதல் தம்பதிகள் இருவருக்கும் இடையே மோதல் வந்தது. கமிஷனர் செல்வ பாலாஜியை பன்ருட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து பின்பு சில வாரங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு பணியாற்றி வருகிறார்.
 

இந்நிலையில் ரோஜா, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவினை தந்துள்ளார். அதில், கமிஷனர் செல்வ பாலாஜி குடியாத்தத்தில் பணியாற்றியபோது, தனது பங்களாவிற்கு அழைத்து பணி நிரந்தரம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார், திருமணம் செய்தவர், பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார். தன்னை ஆசைவார்த்தை கூறி கற்பழித்து தாலி கட்டி ஏமாற்றிய ராணிப்பேட்டை நகராட்சியின் ஆணையராக உள்ள செல்வபாலாஜி, இதுப்போன்று பல பெண்களுக்கு ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவருகிறார் உடனடியாக அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.

Next Story

திடீரென சரிந்து விழுந்த தேர்; மயானக்கொள்ளை விழாவில் நடந்த சோகம்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

வடமாவட்டங்களில் பிரபலமான மயானக் கொள்ளை திருவிழா வேலூரின் மிக முக்கியமான பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகவும் உள்ளது. பாலாற்றங்கரையில் மயானக்கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 9ஆம் தேதி  மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி வேலூர், விருதம்பட்டு, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, கழிஞ்சூர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து பிரமாண்ட தேர் மூலம் ஊர்வலமாக பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர்.

ஊர்வலத்தின் பின்னேயும் முன்னேயும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் போல வேடமிட்டு சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாக சென்றதும் பார்ப்பதற்கு தத்ரூபமாக அமைந்து மெய் சிலிர்க்கச் செய்தது.

ஊர்வலத்தில்  இளைஞர்கள் இளம் பெண்கள், சிறுவர்கள்  டி.ஜே.பாடல்களை ஒலிக்கவிட்டு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். சில ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டு, சிலர் எலும்பு துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக் குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர், வெண்மணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வேலூர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக வந்து சூறையாடல் நடைபெற்றது. சூறையாடல் முடிந்து 3 தேர்களும் திரும்பும் சமயம் மோட்டூர், வெண்மணி பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் எதிர்பாராதவிதமாக சரிந்து கீழே விழுந்தது. தேர் சரிவதை பார்த்து அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடி தப்பினர். ஆனாலும் வெண்மணி பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவர் சிக்கிக்கொண்டார். அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சைபெற்று வருகிறார்.

பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணல் மற்றும் அங்கு செய்யப்பட்டிருந்த உருவ பொம்மைகளால் தேர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. நல்லவேளை பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.