முறைகேடு புகார்; ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

Complaint of malpractice Panchayat  president suspended

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் முறைகேடு புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவராக கீதா துளசிராமன் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் சட்ட விதிகளை மீறி கட்டட வரைபடத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததாகவும், முறைகேடாக தீர்மானங்களை நிறைவேற்றி ஊராட்சிக்கு சேர வேண்டிய நிதிகளை கால தாமதமாக செலுத்தியதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீதான முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கீதா துளசிராமனை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

suspended thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe