Advertisment

திமுக பிரமுகரை தாக்கியதாக புகார் - ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு!

ரதக

திமுக பிரமுகரை தாக்கிய புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது. சுமார் 57 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் வாக்கு சதவீதம் மிகக்குறைவாக பதிவானது. குறிப்பாக சென்னையில் வாக்கு சதவீதம் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகக் குறைவாக 43 சதவீதம் பதிவானது. இதற்கிடையே வாக்குப்பதிவு தினத்தன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் சிலர் திமுகவை இளைஞர் ஒருவரை அரை நிர்வாணமாக்கி சாலையில் அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நரேஷ் என்ற அந்தவாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe